வெள்ளி, 14 நவம்பர், 2014

கரு ஜயசூரிய வந்தாலும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியாது அமைச்சர் பீலிக்ஸ்..!!

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கரு ஜயசூரிய களமிறங்கினாலும் அவரால் வெற்றி பெற முடியாது என்று அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமை வேட்பாளராக போட்டியிட்டவர் கரு ஜயசூரிய. ஆனாலும் அவரால் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெறமுடியவில்லை.

முதன்முதலாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட உபேக்ஷா சுவர்ணமாலியை விடவும் குறைவான வாக்குகளையே பெற்றார்.


இந்நிலையில் கரு ஜயசூரிய ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்டு என்ன சாதிக்க முடியும்? ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருக்கும் வாக்குகளைக் கூட அவரால் பெற முடியாது போய்விடும்.

இன்னொரு புறத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் கரு ஜயசூரிய தான் என்பதை யாரும் இதுவரை பகிரங்கமாக அறிவிக்கவில்லை.

இதுவரை அவர்களால் ஒரு வேட்பாளரை ஒருமனதாக தெரிவு செய்ய முடியவில்லை. அவ்வாறிருக்க தேர்தலில் அவர்கள் எவ்வாறு வெற்றி பெற முடியும் என்றும் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா கேள்வியெழுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக