
அனுப்புபவரின் பெயர் விபரங்கள் குறிப்பிடாது கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து கூட்டங்களை நடாத்துமாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கூட்டங்களில் பங்கேற்பவர்களின் பெயர் விபரங்கள் திரட்டப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கல்வி, சுகாதாரம் மற்றும் மீன்பிடித்துறை ஆகிய அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு இந்த அநாமேதய கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
ஜனாதிபதி தேர்தலின் போது அமைச்சர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளாது அமைச்சு செயலாளர்களின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமைச்சர்கள் இதனால் பதற்றமடைந்து இது பற்றி கேள்வி எழுப்பத் தொடங்கியிருந்தனர்.
சுகாதார அமைச்சின் செயலாளருக்கு இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்ருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த கடிதங்களை தாம் அனுப்பி வைக்கவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக