வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை கொண்டிருப்போர் வட பகுதிக்கு செல்வதற்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது.
இராணுவ அதிகாரி ஒருவரை கோடிட்டு, இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டு கடவுச்சீட்டை கொண்டிருப்போர் இலங்கையின் இறைமைக்கு அச்சுறுத்தலாக நடந்து கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டை மையமாகக்கொண்டே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, வட பகுதிக்கான மூன்று நாள் விஜயத்தை இன்று ஆரம்பிக்கும் நிலையிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு காரணமாக வடக்குக்கு செல்ல ஆயத்தமாகியுள்ள பல வெளிநாட்டவர்கள், தமது பயணத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
பெரும்பாலானோர், நேற்று ஓமந்தை சோதனை சாவடியுடன் திரும்பிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
குறித்த தடை தொடர்பில் முன்கூட்டியே அறிவித்தல் விடுக்கப்படாமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டது.
இதன்காரணமாக மரணவீடுகள், திருமணங்கள் என்ற பல்வேறு நிகழ்வுகளுக்காக வடக்குக்கு செல்லவிருந்த வெளிநாட்டு கடவுச்சீட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் யாழ்ப்பாணத்தில் முன்கூட்டியே ஒதுக்கி வைத்திருந்த ஹோட்டல் அறைகளுக்கான பணமும் வீணாகிப்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோது போக்குவரத்து தடைகள் ஏற்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இராணுவ அதிகாரி ஒருவரை கோடிட்டு, இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டு கடவுச்சீட்டை கொண்டிருப்போர் இலங்கையின் இறைமைக்கு அச்சுறுத்தலாக நடந்து கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டை மையமாகக்கொண்டே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, வட பகுதிக்கான மூன்று நாள் விஜயத்தை இன்று ஆரம்பிக்கும் நிலையிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு காரணமாக வடக்குக்கு செல்ல ஆயத்தமாகியுள்ள பல வெளிநாட்டவர்கள், தமது பயணத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
பெரும்பாலானோர், நேற்று ஓமந்தை சோதனை சாவடியுடன் திரும்பிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
குறித்த தடை தொடர்பில் முன்கூட்டியே அறிவித்தல் விடுக்கப்படாமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டது.
இதன்காரணமாக மரணவீடுகள், திருமணங்கள் என்ற பல்வேறு நிகழ்வுகளுக்காக வடக்குக்கு செல்லவிருந்த வெளிநாட்டு கடவுச்சீட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் யாழ்ப்பாணத்தில் முன்கூட்டியே ஒதுக்கி வைத்திருந்த ஹோட்டல் அறைகளுக்கான பணமும் வீணாகிப்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோது போக்குவரத்து தடைகள் ஏற்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக