ஞாயிறு, 12 அக்டோபர், 2014

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யும் முயற்சியில் அமைச்சர் ராஜித..!!!

மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக வார இறுதி பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலை நடாத்தக் கூடாது என ராஜித கோரி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலை நடத்தாது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைiயை ரத்து செய்ய வேண்டுமென கோரியுள்ளார்.

உடனடியாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தில் சில அமைச்சர்களை சந்தித்து இது தொடர்பில் அமைச்சர் ராஜித பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.


நாடாளுமன்றிற்கு பொறுப்பு சொல்லக் கூடிய ஓர் பிரதமர் ஆட்சி முறைமை உருவாக்கப்பட வேண்டும்.

அதன் ஊடாக ஜனாதிபதி பிரதமராக நியமிக்கப்பட வேண்டுமென ராஜித தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வதில் ராஜித கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக