திங்கள், 20 அக்டோபர், 2014

கோட்டையில் பாரிய ஆர்ப்பாட்டம் போக்குவரத்து முடங்கியது...!!!

கொழும்பு, கோட்டையில் ஜே.வி.பி.யினரின் ஏற்பாட்டில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், ஓல்கட் மாவத்தையின் ஒரு வழிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

ஜே.வி.பி.யின் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரவீர, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக