திங்கள், 20 அக்டோபர், 2014

யாழ் மாவட்டத்தில் பெய்த கனமழையால் 300 குடும்பங்கள் பாதிப்பு...!!!!

யாழ் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பெய்த கனமழை காரணமாக 300 வரையான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
யாழ்.பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட நாவாந்துறை பிரதேசத்தில் உள்ள 300 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் வெள்ள நீர் அதிகளவில் தேங்கியுள்ளமையினால் சுகாதார பிரச்சினைகள் மற்றும் குடிநீர் பிரச்சினைகள் உருவாகியுள்ளது.

இந்நிலையில் அப்பகுதியில் தேங்கியிருக்கும் வெள்ள நீரை அகற்றுவதற்காக பாரிய இயந்திரங்களை அப்பகுதிக்கு கொண்டு சென்றிருந்த போதும் கடுமையான சேறு சகதியினால் வாகனங்களை உள்ளே கொண்டு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால்  மனித வலுவைப் பயன்படுத்தி வாய்க்கால்கள் வெட்டியே நீரை வெளியேற்றி வருகின்றோம். எனினும் பெரிதாக வெள்ளநீர் வழிந்தோடியதாக இல்லை. இந்த நிலையில்
பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உலர் உணவுகளை வழங்குவதற்கான நடவடிக்கைளை, மாவட்டச் செயலகம் மேற்கொண்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஒவ்வொரு வருடமும் நாங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படுகின்றோம். ஆனால் எம்மை எவரும் கண்டுகொள்ளவில்லை. நாங்கள் மக்களா? மந்தைகளா? என பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக