திங்கள், 20 அக்டோபர், 2014

வடக்கில் பொதுமக்களுக்கு மட்டுமன்றி சிங்கள வர்த்தகர்களுக்கும் காணி ஒதுக்கீடு...!!!!

வடக்கில் தொழிற்சாலைகளை நிறுவ திட்டமிடும் சிங்களவர்களுக்கு அரச காணிகளை ஒதுக்கிக்கொடுக்க அராசங்கம் தீர்மானித்துள்ளது.
இதன் முதற்கட்டமாக முல்லைத்தீவு மற்றும் மன்னாரில் தனியார் ஆயத்த ஆடைத் தயாரிப்பு தொழிற்சாலை நிறுவ உத்தேசித்துள்ள சிங்கள வர்த்தகருக்கு சுமார் 75 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவற்றுக்கு மேலதிகமாக மணலாறு (வெலிஒய) பிரதேசத்தில் மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்குரிய 50 ஏக்கர் காணியில் பாரிய தொழிற்சாலைகள் உள்ளிட்ட நிறுவனங்கள் அமைப்பதற்கு ஊக்குவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


மேலும் மன்னாரில் முசலி பிரதேச செயலகப் பிரிவில் கொண்டச்சி பிரதேச கல்லாறு கிராமத்திலும் பாரிய நிலப்பகுதி ஒன்று சிங்கள வர்த்தகர்களின் தொழில் முயற்சிகளுக்கு ஒதுக்கப்படவுள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை பொருளாதார ரீதியாக வலுவூட்டும் நடவடிக்கை என்ற பெயரில் இவ்வாறு காணிகளை பகிர்ந்தளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இங்கு தொழில்துறைகளை ஆரம்பிக்கும் வர்த்தகர்களுக்கு இராணுவத்தினரின் உதவியும் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக