வியாழன், 18 செப்டம்பர், 2014

தமிழ்ப் பெண் ஒருவருக்கு தவறுதலாக ஆயுள் தண்டனை விதித்தமைக்காக நீதிமன்றம் வருத்தம்!!

தமிழ்ப் பெண் ஒருவருக்கு தவறுதலாக ஆயுள் தண்டனை விதித்தமைக்காக மேன்முறையீட்டு நீதிமன்றம் வருந்துவதாகத் தெரிவித்துள்ளது.
இன்றைய சிங்கள நாளிதழ்கள் பலவற்றிலும் இது பற்றிய தகவல்கள் பிரதான செய்திகளாக வெளியிடப்பட்டுள்ளன.

இரண்டு பிள்ளைகளின் தாயான கருப்பையா பூங்கொடி என்ற பெண்ணே இவ்வாறு தண்டிக்கப்பட்டிருந்தார்.

இந்தப் பெண் ஒன்பது ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து
வந்துள்ளார்.

நீதிமன்ற நடவடிக்கைகளின் குறைபாடுகளினால் இந்தப் பெண் வீணாக ஒன்பது ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க நேரிட்டதாக நீதவான் ஒப்புக் கொண்டுள்ளார்.

குறித்த பெண்ணுக்கான தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்வதாக மேன்முறையீட்டு நீதவான் ஏ.சலாம் அறிவித்துள்ளார்.

வழக்கு விசாரணைகளில் கால தாமதம் ஏற்பட்டதாக நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கு விசாரணைகள் கால தாமதமடைந்தமை வேதனையளிக்கின்றது.

வழக்கு தாக்கல் செய்யாது தண்டனையை அனுபவித்திருந்தால் நன்நடத்தை மற்றும் ஏனைய காரணிகளின் அடிப்படையில் வழக்கு விசாரணைகளுக்கு முன்னதாகவே இந்தப் பெண் விடுதலையாகியிருக்கக் கூடிய சாத்தியங்களும் காணப்படுகின்றன.

துரித கதியில் வழக்கு விசாரணை நடத்தப்படாமையினால் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.

நிர்வாகக் குறைபாடுகளினால் நாட்டு மக்களுக்கு நீதி கிடைக்காத நிலைமை ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மேல் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணை நேர்மையான முறையில் நடைபெறவில்லை என்பது தெளிவாகின்றது இதனால் பெண்ணை விடுதலை செய்கின்றேன்.

1998ம் ஆண்டு 43 கிராம் எடையுடைய போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இந்தப் பெண் கைது செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் பெண் குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்தது.

இதன்படி, 2005ம் ஆண்டு மேல் நீதிமன்ற நீதவான் ஆயுள் தண்டனை விதித்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக