புதன், 20 ஆகஸ்ட், 2014

விடுதலைப் புலிகள் சிங்களவர்களை அழித்து விட்டார்கள்! அமைச்சர் சம்பிக்க....!!!!

விடுதலைப் புலிகள் இலங்கையில் சிங்களவர்களின் பெரும்பான்மை ஆதிக்கத்தை அழித்து விட்டதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க கவலை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான யுத்தத்துக்கு முன்னர் இலங்கையில் சிங்களவர்களின் பெரும்பான்மை சனப்பரம்பல் எந்தவித அச்சுறுத்தலும் இன்றி காணப்பட்டது. ஆனால் விடுதலைப் புலிகள் ஏராளமான சிங்களவர்களை அழித்துவிட்டார்கள்.

இதன் காரணமாக சிங்களவர்களின் எண்ணிக்கையில் சடுதியான ஒரு வீழ்ச்சி ஏற்பட்டது.

தற்போது முஸ்லிம், கிறிஸ்தவ அடிப்படைவாத அமைப்புகள் விடுதலைப் புலிகள் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். சிங்களவர்களின் பெரும்பான்மை எண்ணிக்கையை சிறிது சிறிதாக அழித்து வருகின்றார்கள்.



இதே நிலை நீடித்தால் இன்னும் சிறிது காலத்திற்குள் இலங்கையில் சிங்களவர்கள் பெரும்பான்மை பலத்தை இழந்து விடுவார்கள். வேறு இனத்தவர்களின் சனத்தொகை சிங்களவர்களை விட அதிகரித்துவிடும்.

இந்த நூற்றாண்டுடன் சிங்களவர்களின் பெரும்பான்மை எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுவிடும். அதன் பின் சிங்களவர்கள் அடுத்தவர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்க நேரிடும் என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் கருத்து வெளியிட்டு்ள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக