சிறிலங்கா நாட்டிற்கு வந்த வெளிநாட்டு தூதுவர்களை நாடு முழுவதும் சுற்றிப் பார்த்து, முன்னேற்றத்தை கண்டறியும்படி ஜனாதிபதி மகிந்தா ராஜபக்ச கூறியுள்ளார்.
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டு உயர் ஸ்தானிகர்கள் மற்றும் மூன்று புதிய தூதுவர்கள் இன்று காலை தமது நியமனப் பத்திரங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கையளித்தனர்.
இது தொடர்பான வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் கிரஹம் மோர்டன், ஜோர்தான் ஹஷேமைட் இராச்சியத்தின் தூதுவர் ஹசன் மஹ்மூத் முகமது அல் ஜவாமி, மாலைதீவுகள் குடியரசு உயர் ஸ்தானிகர் திருமதி ஸாஹியா ஸரீர், பூட்டான் இராச்சியத்தின் தூதுவர் திருமதி பெமா சோடன், பொஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினாவின் தூதுவர் சாபித் சுபாசிக் ஆகியோரே தமது நியமனக் கடிதங்களை கையளித்தனர்.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் வெளிவிவகார அமைச்சின் பதில் செயலாளர் திருமதி சித்ராங்கனி வகீஸ்வர ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி மாளிகையில் இன்று நடந்த கலந்துரையாடலில், போரின் பின்னர் நாட்டில் நடந்த முன்னேற்றத்தையும், 30 வருட துயரத்திற்கு பிறகு தற்போது நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவி வருவதாகவும் வெளிநாட்டு தூதர்களுக்கு ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி, தமிழீழ விடுதலைப் புலிகளின் மிருகத்தன்மையும், வடக்கு மாகாணத்தில் பள்ளிக்கூடம், போக்குவரத்து மற்றும் மருத்துவமனைகளை LTTE அழித்ததையும், பின்னர் அரசு அதனை சீரமைத்ததையும் பற்றி விவரித்தார்.
மேலும் வடக்கு மாகாணத்தில் 28 வருடங்களுக்கு பிறகு தேர்தல் நடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அனைத்து தூதர்களும் சிறிலங்காவுடன் உறவினை மேம்படுத்தவும், இணைந்து செயல்பட்டு அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்தை காணவும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டு உயர் ஸ்தானிகர்கள் மற்றும் மூன்று புதிய தூதுவர்கள் இன்று காலை தமது நியமனப் பத்திரங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கையளித்தனர்.
இது தொடர்பான வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் கிரஹம் மோர்டன், ஜோர்தான் ஹஷேமைட் இராச்சியத்தின் தூதுவர் ஹசன் மஹ்மூத் முகமது அல் ஜவாமி, மாலைதீவுகள் குடியரசு உயர் ஸ்தானிகர் திருமதி ஸாஹியா ஸரீர், பூட்டான் இராச்சியத்தின் தூதுவர் திருமதி பெமா சோடன், பொஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினாவின் தூதுவர் சாபித் சுபாசிக் ஆகியோரே தமது நியமனக் கடிதங்களை கையளித்தனர்.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் வெளிவிவகார அமைச்சின் பதில் செயலாளர் திருமதி சித்ராங்கனி வகீஸ்வர ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி மாளிகையில் இன்று நடந்த கலந்துரையாடலில், போரின் பின்னர் நாட்டில் நடந்த முன்னேற்றத்தையும், 30 வருட துயரத்திற்கு பிறகு தற்போது நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவி வருவதாகவும் வெளிநாட்டு தூதர்களுக்கு ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி, தமிழீழ விடுதலைப் புலிகளின் மிருகத்தன்மையும், வடக்கு மாகாணத்தில் பள்ளிக்கூடம், போக்குவரத்து மற்றும் மருத்துவமனைகளை LTTE அழித்ததையும், பின்னர் அரசு அதனை சீரமைத்ததையும் பற்றி விவரித்தார்.
மேலும் வடக்கு மாகாணத்தில் 28 வருடங்களுக்கு பிறகு தேர்தல் நடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அனைத்து தூதர்களும் சிறிலங்காவுடன் உறவினை மேம்படுத்தவும், இணைந்து செயல்பட்டு அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்தை காணவும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக