திங்கள், 9 ஜூன், 2014

(சற்றுமுன்னர்)வவுனியாவில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் கவனயீர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது..!! (படங்கள்)



இன்றைய தொழிலாளர்களின் கவனயீர்ப்பு போராட்டத்தின் போது, ஸ்தலத்திற்கு விஜயம் செய்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. சிவசக்தி ஆனந்தன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும், கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு அவர்களுக்கான ஆதரவை தெரிவித்தார்கள்.

இவ் நிகழ்வில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் (புளொட்) சிரேஷ்ட உறுப்பினர் திரு. முத்தையா கண்ணதாசன்,செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர் சிவம், வவுனியா மாவட்ட வெகுஜன அமைப்பின் தலைவர் தேவா, தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டு அவர்களுக்கான ஆதரவை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


தற்போது கிடைத்த செய்தி-  போராட்டத்தின் போது வட மாகாண உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அவர்களிடம் சந்தித்து தொழிலாளர்கள் சார்பில் சிறி ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்களுடன் பல தரப்பட்ட அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டு ஆதரவை வழங்கினர், மாவட்ட தொழில்சங்க சம்மேளன உறுப்பினர்களும் தொழிலாளர்களின் சார்பில் இருவரும் பேச்சுவார்த்தை நடாத்தியதன் பின்னர், மனிதாபிமான அடிப்படையில் ஒரு வார காலத்துக்குள் தொழிலாளர்களின் நிலைமையினை கருத்தில் கொண்டு அவர்களுக்கு சாதகமான பதிலை தருவதாகவும், அதன் பின்னர் உதவி ஆணையாளர் போராட்டம் நடத்திய தொழிலாளர்களுடன் தொடர்புகொண்டு தீர்வு கிடைக்கும் வரை பரிசீலனை செய்வதாகவும் வேண்டுகோள் விடுத்த பின்னர் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக