வியாழன், 5 ஜூன், 2014

கத்திக்குத்துக்கு இலக்காகி கணவன் - மனைவி காயம்!!

கச்சாய் தெற்கில் இன்று இடம்பெற்ற திருட்டு முயற்சி ஒன்றின் போது முதியவர்களான கணவன் - மனைவி ஆகிய இருவரும் கத்திக்குத்துக்கு இலக்காகினர். இன்று இரவு 8 மணியளவில் கச்சாய் தெற்குப் பகுதியில் கத்திகள், பொல்லுகள் சகிதம் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வீடொன்றுக்குள் புகுந்து திருட முற்பட்டபோது வீட்டில் உள்ளவர்கள் கூக்குரலிடவே வீட்டில் இருந்த கணவன் - மனைவி ஆகிய இருவரையும் கத்தியால் குத்திவிட்டு வீட்டு
ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கிவிட்டுச் தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தில் அம்பலவாணர் வேலுப்பிள்ளை (வயது 71) அவரது மனைவியான வேலுப்பிள்ளை காசிப்பிள்ளை (வயது 63) ஆகிய இருவரும் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக