திங்கள், 9 ஜூன், 2014

அம்பாறையில் ரீ-56 துப்பாக்கி மீட்பு!!

அம்பாறை வீரசோலை எனுமிடத்தில் இன்று காலை ரீ-56 ரக துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை கிராமத்தை அடுத்துள்ள வீரசோலை தமிழ் கிராமத்தில் இன்று காலை பனை மரமொன்றை வெட்டிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மரத்தின் அடியில் சந்தேகத்துக்கு இடமான முறையில்
புதைக்கப்பட்டிருந்த பொதியொன்றைக் கண்டுள்ளனர்.

இதுகுறித்து சம்மாந்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அங்கு சென்ற பொலிஸார் பொதியை சோதனை செய்த போது ரீ-56 ரக துப்பாக்கி ஒன்று அதில் மறைத்துவைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது. துப்பாக்கியை மீட்ட சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக