புதன், 14 மே, 2014

எமது உறுப்பினர்களை விடுவிக்காமால், மாணவிகளை விடுவிக்க மாட்டோம்!!! தீவிரவாதிகள்

கைது செய்யப்பட்டுள்ள தமது குழுவின் உறுப்பினர்களை விடுதலை செய்யும் வரை தாம் கடத்தி வைத்துள்ள மாணவிகளை விடுதலை செய்யப்போவதில்லையென நைஜீரிய பொக்கோ ஹராம் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் சேகுத் தெரிவித்துள்ளார்.

அவ்வமைப்பு நேற்று வெளியிட்டுள்ள புதிய காணொளியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


அக்கானொளியில் கடத்தப்பட்ட மாணவிகள் இஸ்லாமிய முறைப்படி பிரார்த்தனைகளில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் காணப்படுகின்றன. 17 நிமிடங்கள் வரை நீடிக்கும் காட்சிகளில் முழுநீள உடை அணிந்த மூன்று பெண்கள் உரையாற்றுவதாகவும்,

அவர்களுள் ஒரு மாணவி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த தன்னை இஸ்லாமிய மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐரோப்பிய கலாசார முறையிலான கல்வியை தடைசெய்யக்கோரி கடந்த மாதம் பெண்கள் விடுதியொன்றுக்குள் நுழைந்த ஆயுதம் தாங்கிய நபர்கள் 200ற்கும் மேற்பட்ட மாணவிகளை பணயக்கைதிளாக கடத்திச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக