புதன், 14 மே, 2014

கல்முனை மாநகர சபை உறுப்பினரின் அடாவடித்தனம் இதோ!! (படங்கள் இணைப்பு)

கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஒருவர் சிரேஷ்ட தமிழ் அதிகாரி ஒருவரின் கன்னத்தில் அறைந்து தூஷித்த சம்பவம் ஒன்று 12/05/2014 மாலை இடம்பெற்றுள்ளது. கல்முனையின் தலைமை தனக்குச் சார்பாக செயற்படுகிறது என்ற ஒரே காரணத்தினாலேயே இந்த அரைவேக்காட்டு அரசியல்வாதி தனது சண்டித்தனத்தை குறித்த சிரேஷ்ட தமிழ் அதிகாரி மீது காட்டியுள்ளார். இதன் காரணமாக தற்போது அங்கு சில பிரச்சினைகள் எழுந்துள்ளதாகத் தெரிய வருகிறது. அங்குள்ள அதிகாரிகள் மட்டத்திலும் கொந்தளிப்பு நிலைமை தோன்றியுள்ளது.

அதேபோன்று, இன்னும் ஓர் அதிகாரியை எச்சரிக்கை செய்யும் வகையிலும் இதே அடாவடி இன்று நடந்து கொண்டுள்ளார். அத்துடன் எதிர்காலத்தில் கண்ணன் (இது ஒரு கற்பனை பெயரே தவிர சட்ட ஆதாரமாக கொள்ள முடியாது) வழியில் செல்ல வேண்டுமென்றும் குறித்த அதிகாரிகளுகு உத்தரவிட்டுள்ளாராம்.


குறித்த மாநகர சபை உறுப்பினர் ஆளும் தரப்பான முஸ்லிம் காங்கிரஸை சேராத போதும், இவர் கல்முனை தொரையின் கையாள் என்பதனாலேயே இவ்வாறான அடாவடிகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

சிரேஷ்ட அரச அதிகாரிகள் மீது இவ்வாறான தாக்குதல்களை உள்ளுர் அரசியல் கற்றுக்குட்டிகள் மேற்கொள்வது தொடர்பில் கல்முனை தொரை ஏன்தான் மௌனிக்கிறாரோ தெரியவில்லை. சொந்தக் காலில் நிற்க துணிவில்லாத பலமில்லாத, திராணியில்லாத கையாலாகத்தனம் போன்ற காரணங்களினாலேயே இவ்வாறான அடாவடித் தனங்கள் எல்லாம் அங்கு “பெஸ்ட்“ ஆக அரங்கேறி வருகிறது.

இதேவேளை, கல்முனை மாநகர சபையின் ஆட்சி முஸ்லிம் காங்கிரஸ் வசமா? அல்லது பிறிதொரு நபரின் வசமா? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

மேலும் இதற்கு முன்னர் கூட பல சம்பவங்கள் இடம்பெற்றும் எவ்வித நடவடிக்கையும் இது தொடர்பில் எடுக்கப்படவில்லை. இதன் மர்மம்தான என்ன? எத்தனையே விடயங்களில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் நிலையில் இந்த இரு அடாவடிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? இதில் ஓர் அடாவடி கல்முனை தொரையின் வாலே தவிர மாநாகர சபை உறுப்பினர் அல்லர். இருப்பினும் அவருக்குள்ள அதிகாரங்கள் அமைச்சர் மேர்வின் சில்வாவையும் தோற்கடித்து விடும்.

ஒரு சிலரின் செயற்பாடுகளினால் கல்முனை மாநகர சபை காடையர்கள் கூடாராமாக விரைவில் மாறும் நிலை ஏற்படலாம்.
இதேவேளை, அண்மையில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட ஊழியர்களுக்குப் பதிலாக புதிய ஊழியர்களை நியமிப்பதற்கான ஏற்பாடுகளும் அங்கு இப்போது தடல்புடலாக இடம்பெறுகிறதாம். ஒரு மாநகர சபை உறுப்பினர் இருவருக்கு தொழில் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த அடிப்படையில் ஒரு சில மாநகர சபை உறுப்பினர்களால் இதற்கான தொகையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு தொழில் வழங்குவதாயின் 5,00,000 இலட்சம் ரூபா வரை வழங்க வேண்டுமென கோரப்படுகிறது. இதோ அந்த இலஞ்சப் பட்டியல்.

1. கல்முனைக்குடியைச் சேர்ந்த ஒருவருக்கு தொழில் வழங்குவதற்கான இலஞ்சம் - 2,00,000 ரூபா

2. மருதமுனையைச் சேர்ந்த ஒருவருக்கு தொழில் வழங்குவதற்கான இலஞ்சம் - 3,00,000 ரூபா

3. நற்பிட்டிமுனையைச் சேர்ந்த ஒருவருக்கு தொழில் வழங்குவதற்கான இலஞ்சம் - 2,50,000 ரூபா

4. சாய்ந்தமருதுவைச் சேர்ந்த ஒருவருக்கு தொழில் வழங்குவதற்கான இலஞ்சம் - 5,00,000 ரூபா

இதில் யார் யாருக்கு பங்கு? சின்ன மீன் யாருக்கு பெரிய மீன் யாருக்கு? தீர்மானிப்பது நீங்கள் - 

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக