செய்யப்பட்ட கற்றல் உபகரண தொகுதிகள் இன்றையதினம் (13/05) கையளிக்கப்பட்டது.
இன்றைய நிகழ்வில் புளொட் முக்கியஸ்தரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும், கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), கோவில்குளம் இளைஞர் கழகத்தைச்சேர்ந்த ஓவியன், நிகேதன்,
காண்டீபன், செல்வம் ஆகியோரும், ஸ்ரீ நகர் கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினரும், ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய பரிபாலன சபையின் செயலாளருமான திரு எஸ்.தர்மகுலசிங்கம், ஸ்ரீ நகர் கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர் சதீஸ், மாதர் அபிவிருத்திச்சங்க தலைவி திருமதி. ஸ்ரீரஞ்சன், பொருளாளர் திருமதி சாந்தகுமாரி, தங்கண்ணா மலரும் அரும்புகள் முன்பள்ளி தலைவி திருமதி ஜீவகேஸ்வரி, செயலாளர் திருமதி ஜான்சி, முன்பள்ளி ஆசிரியை செல்வி நிரோஜினி, பெற்றோர்கள், மாணவர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் உரை நிகழ்த்திய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் எமது குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலம் அமைவது முன்பள்ளியில் இருந்து, எனவே மாணவச்செல்வங்கள் நல்ல முறையில் தமது ஆரம்ப கல்வியை பெற்று நாட்டின் வளமான சிற்பிகளாக மிளிர வேண்டும் என கேட்பதுடன், ஆசிரியர்களும் மாணவர்களில் அதீத அக்கறை எடுத்து பெற்றோர்களின் பங்களிப்புடன் மாணவர்களுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுவது யாவரும் அறிந்தது இது தொடர்ந்து எமது சமுகத்தில் இடம்பெற வேண்டும் என தெரிவித்தார்.
ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய பரிபாலனசபை செயலாளர் திரு தர்மகுலசிங்கம் உரையாற்றும்போது எமது வேண்டுகோளிற்கு இணங்க இந்த உதவிகளை ஒழுங்கமைத்த புளொட் முக்கியஸ்தர் மோகன் அண்ணா அவர்களிற்கும் லண்டன் தோழர் திரு த. நாகராஜா அவர்களுக்கும் எமது நன்றிகள் என தெரிவித்தார்.
மாதர் சங்க தலைவி திருமதி ஸ்ரீரஞ்சினி உரையாற்றும் போது, எமது கிராமத்தில் வறுமைகோட்டிற்கு உட்பட்ட பலர் இருப்பதனால் பல காலங்களாக அபிவிருத்திகள் அற்ற கிராமம் போல தோற்றமளிக்கிறது, எனவே சமூகத்தில் அக்கறை கொண்டவர்கள் எமது கிராமத்திற்கு உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பூர்வீகம் செய்திகளுக்காக ஓவியன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக