புதன், 14 மே, 2014

கொன்சலிற்றா வழக்கு - மதகுருமார் நீதிமன்றில்... முக்கிய தடயங்களும் அகப்பட்டது. ( படங்கள் இணைப்பு)


வழக்கை விசாரித்த நீதிவான் பொ.சிவகுமார் மீண்டும் அடுத்தமாதம் (ஜூன் 6)  6ஆம் திகதிக்கு அதனை ஒத்திவைத்தார்.

தப்பியோடி விட்டதாகப் பிரச்சாரம் செய்யப்பட்ட மதகுருமார் இருவரும்  திங்கட்கிழமை நீதிமன்றினில் ஆஜராகியுள்ளனர். குருநகரில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெரோமி கொன்சலிற்றாவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று இரண்டாவது தடவையாக யாழ்.நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது வழக்கில் சந்தேக நபர்கள் எனக் கருதப்படும் இரண்டு மதகுருமாரும்; மன்றில் முன்னிலையாகிச் சாட்சியமளித்துள்ளனர்.


தமக்கும் உயிரிழந்த யுவதிக்கும் தனிப்பட்ட வகையில் எந்த தொடர்பும் இருக்கவில்லை. அவர் மறைக்கல்வி ஆசிரியராக இருந்ததன் காரணமாக அது தொடர்பான தொடர்பே இருந்தது. இதுதவிர இந்தப் பெண்ணுடன் தொலைபேசியில் தொடர்புகொள்ளவுமில்லை. குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) அனுப்பவுமில்லை என்று மன்றில் அவர்கள் சாட்சியமளித்துள்ளனர்; வழக்கை விசாரித்த நீதிவான் பொ.சிவகுமார் மீண்டும் அடுத்தமாதம் 6ஆம் திகதிக்கு அதனை ஒத்திவைத்தார்.

 பாலியல் ரீதியாக மதகுருமார் இருவரும் தொந்தரவு கொடுத்ததன் காரணமாகவே தமது மகள் தற்கொலை செய்துகொண்டார் என உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் மன்றில் குற்றம் சாட்டியிருந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி வீட்டில் இருந்து காணாமற்போன இந்த யுவதி மறுநாள் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

குறித்த மதகுருமார் நீதிமன்றில் ஆஜராவதை அறிக்கையிட பெருமளவில் ஊடகவியலாளர்கள் படை எடுத்திருந்த நிலையில் சட்டத்தரணியின் வேண்டுகோளின் பேரினில் நீதிபதியின் அறையினுள் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதனிடையே குறித்த மதகுருமாரினால் அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகள் உள்ளிட்ட ஆவணங்கள் குறித்த தொலைபேசி நிறுவனத்தால் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவை பொலிஸாரால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக