வெள்ளி, 16 மே, 2014

காணாமற்போனதாக கூறப்படுபவர்களில் அநேகமானவர்கள், வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கை.......!!!!!!!

காணாமற்போனதாக கூறப்படுபவர்கள் தொடர்பான பெயர்ப்பட்டியலிலிருந்து 90 சதவீதமானவர்களின் பெயர்களை நீக்குவதற்கு பாதுகாப்பு தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

காணாமற்போனதாக கூறப்படுபவர்களில் அநேகமானவர்கள், வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவர்கள் தொடர்பில் சர்வதேச நாடுகளிடம் விபரம் கோரியுள்ளோம். அந்த விபரங்கள் கிடைக்கும் பட்சத்தில் 90 சதவீதமானவர்களின் பெயர்கள், காணாமற்போனோர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என இராணுவ மற்றும் பாதுகாப்பு ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர்
ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் கே.தயாபரராஜா, தனது குடும்பத்தாருடன் இந்தியாவில் தஞ்சமடைந்திருப்பதன் மூலம் காணாமற்போனோர்கள், வெளிநாடுகளில் தங்கியிருக்கின்றமை உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், சட்டவிரோதமாக குடியேறியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் நாம் சர்வதேச நாடுகளிடம் விபரம் கோரியுள்ளோம். அந்நபர்களின் பெயர் விபரங்கள் எமக்கு கிடைக்குமாக இருந்தால், காணாமற்போனதாக கூறப்படுபவர்களின் பெயர்ப்பட்டியலில் இருந்து 90 சதவீதமானவர்களின் பெயர்களை எம்மால் நீக்கக் கூடியதாக இருக்கும் என்றும் அவர் கூறினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக