வவுனியா தேசிய கல்வியில் கல்லூரியின் மூன்றாவது பீடாதிபதியாக கௌரவ கு. சிதம்பரநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் நடைபெற்ற வவுனியா கல்வியியற் கல்லூரியின் 20 ஆண்டு நிறைவுவிழாவில் உரையாற்றிய போது.......
(வவுனியா கல்வியியற் கல்லூரியின் 20 ஆண்டு நிறைவுவிழா பீடாதிபதி க. பேணாட் தலைமையில் இடம்பெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார்.)
எதிர்பார்ப்புக்கள் அதிகமாக இருந்தபோது நடந்தது எதுவும் இல்லை. எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தபோது நடந்தது நிறையப்போல் இருக்கும் என வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் உப–பீடாதிபதி கு. சிதம்பரநாதன் தெரிவித்தார்.
வவுனியா கல்வியியற் கல்லூரியின் 20 ஆண்டு நிறைவுவிழா பீடாதிபதி க. பேணாட் தலைமையில் இடம்பெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
மாணவர்கள் நிறையவே முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். எப்போது நேரம் கிடைக்கின்றதோ அப்பொழுதெல்லாம் மாணவர்கள் கற்க ஆயத்தமாக இருக்கவேண்டும். எந்தளவிற்கு நீங்கள் முயற்சி எடுக்கின்றீர்களோ அந்த அளவிற்கு நன்மை உங்களை தேடிவரும். துரதிஷ்டவசமாக பல மாணவர்கள் முயற்சி எடுத்துக்கொள்வதில்லை. முயற்சியை தொடர்ச்சியாக எடுக்கும் போது உங்களுக்கு முதிர்ச்சி வரும். அந்த முதிர்ச்சி எங்களுக்கு நல்ல விளைவுகளை தரும். முதிர்ச்சி இல்லாததால் வரும் விளைவுகள் உங்களுக்கு உபயோகமானதாக இருக்காது. உருவத்தால் உயர்ந்த மரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றி பயன்தராது.
எனவே, நீங்கள் முதிர்ச்சியின் அனுபவத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். கற்கும் உள்ளத்திற்குத் தயாராக வேண்டும். அப்போது தான் நீங்கள் மேன்மையடைய முடியும்.
எங்களுடைய கல்லூரி புகழின் உச்சிக்குப் போயிருக்கின்றது. இகழ்ச்சியின் ஆழத்திற்கும் போயிருக்கின்றது. ஆனால் அதனை ஏற்றுக்கொள்கின்றனரோ தெரியவில்லை. பல ஆக்கங்களையும் நன்மைகளையும் கண்டிருக்கின்றது. இல்லை, அழிவுகளையும் தொட்டுப்பார்த்திருக்கின்றது.
ஏற்றத்தினை நாம் கண்டிருக்கின்றோம்; இறக்கத்தினையும் கண்டுகொண்டிருக்கின்றோம். உயர்வை நாம் பெற்றிருக்கின்றோம். தாழ்வையும் நாம் பெற்றிருக்கின்றோம். நிறைய மகிழ்ச்சியை பெற்றிருக்கின்றோம். துன்பத்தையும் நாம் அடைந்திருக்கின்றோம். நாம் மேன்மையையும் வானளாவப் பெற்றிருக்கின்றோம். ஆனால், இழிவான நிலையையும் பெற்றிருக்கின்றோம். இவை எல்லாவற்றுக்கும் நானும் காரணமாக இருந்திருக்கின்றேன். அர்ப்பணிப்புடனும் கூட்டுணர்வுடனும் பொறுமையுடனும் எப்பொழுதெல்லாம் நாம் சேவையாற்றினோமோ அப்பொழுதெல்லாம் நாம் ஆக்கத்தையும் புகழையும் வெற்றியையும் பெற்றுள்ளோம்.
எப்பொழுதெல்லாம் சந்தர்ப்பத்துக்கு ஒவ்வாத வகையில் பொய் கூறினோமோ, அதிக எதிர்ப்பார்ப்புகளுக்கு உட்பட்டோமோ, அதிக ஆசைக்கு அடிமைப்பட்டோமோ அப்பொழுதெல்லாம் அழிவையும் துன்பத்தையும் இழிவையும் பெற்றுக்கொண்டோம்.
ஆசிரியர்களாகிய எங்களுக்கு சமூகப் பார்வையும் நேர்த்தியான பார்வையும் இருத்தல் வேண்டும். எங்களுடைய பங்குபற்றலை நாங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். இது கல்வி சார்ந்த ஊழியர்களுக்கு மட்டுமல்ல, கல்வி சாரா ஊழியர்களுக்கும் பொருந்தும். இக் கல்லூரி உயிர்ப்புடன் இயங்குவதாலேயே நாம் உழைத்து ஊதியம் பெற்று வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதனை அனைவரும் உணரவேண்டும் என தெரிவித்தார்.
இவரின் பதிவுகள் சில ......
மூன்று முறிப்பு பனங்காமத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் ஆரம்ப கல்வியை யோகபுரம் மகாவித்தியாலயத்திலும் இடை நிலை கல்வியை ஓமந்தை மத்திய கல்லூரியிலும் உயர் கல்வியை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திலும் கற்றார். 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பட்டதாரியான இவர் 1982 இல் முல்லை புதுக்குடியிருப்பு மகாவித்தியாலயத்தில் விஞ்ஞான ஆசிரியரானார்.
1990 ஆம் ஆண்டு யாழ்ப்பணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமா பட்டத்தை பெற்ற இவர் 23.9.1993 அன்று வவுனியா தேசிய கல்வியில் கல்லூரியின் உதவி விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்.
1999 இல் தேசிய கல்வி நிறுவகத்தில் கல்வி முதுமாணி பட்டம் பெற்ற இவர் 2001 ஆம் ஆண்டு மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான கல்வியில் கல்வி முதுமாணி பட்டம் பெற்றார்.
2002 இல் வவனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் விரிவுரை இணைப்பாளராக பதவியுயர்வு பெற்ற இவர் 2004 ஆம் ஆண்டு கல்வியும் தர மேம்பாடும் உப பீடாதிபதியானார்.
2008 ஆம் ஆண்டு தேசிய கல்வி நிறுவகத்தில் பட்டபின் கல்வி முகாமைத்துவ டிப்ளோமா பட்டம் பெற்ற இவர் கொழும்பு மனித உரிமைகள் நிலையத்தில் மனித உரிமைகள் டிப்ளோமாவையும் பெற்றார்.
கடந்த வருடம் நடைபெற்ற வவுனியா கல்வியியற் கல்லூரியின் 20 ஆண்டு நிறைவுவிழாவில் உரையாற்றிய போது.......
(வவுனியா கல்வியியற் கல்லூரியின் 20 ஆண்டு நிறைவுவிழா பீடாதிபதி க. பேணாட் தலைமையில் இடம்பெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார்.)
எதிர்பார்ப்புக்கள் அதிகமாக இருந்தபோது நடந்தது எதுவும் இல்லை. எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தபோது நடந்தது நிறையப்போல் இருக்கும் என வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் உப–பீடாதிபதி கு. சிதம்பரநாதன் தெரிவித்தார்.
வவுனியா கல்வியியற் கல்லூரியின் 20 ஆண்டு நிறைவுவிழா பீடாதிபதி க. பேணாட் தலைமையில் இடம்பெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
மாணவர்கள் நிறையவே முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். எப்போது நேரம் கிடைக்கின்றதோ அப்பொழுதெல்லாம் மாணவர்கள் கற்க ஆயத்தமாக இருக்கவேண்டும். எந்தளவிற்கு நீங்கள் முயற்சி எடுக்கின்றீர்களோ அந்த அளவிற்கு நன்மை உங்களை தேடிவரும். துரதிஷ்டவசமாக பல மாணவர்கள் முயற்சி எடுத்துக்கொள்வதில்லை. முயற்சியை தொடர்ச்சியாக எடுக்கும் போது உங்களுக்கு முதிர்ச்சி வரும். அந்த முதிர்ச்சி எங்களுக்கு நல்ல விளைவுகளை தரும். முதிர்ச்சி இல்லாததால் வரும் விளைவுகள் உங்களுக்கு உபயோகமானதாக இருக்காது. உருவத்தால் உயர்ந்த மரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றி பயன்தராது.
எனவே, நீங்கள் முதிர்ச்சியின் அனுபவத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். கற்கும் உள்ளத்திற்குத் தயாராக வேண்டும். அப்போது தான் நீங்கள் மேன்மையடைய முடியும்.
எங்களுடைய கல்லூரி புகழின் உச்சிக்குப் போயிருக்கின்றது. இகழ்ச்சியின் ஆழத்திற்கும் போயிருக்கின்றது. ஆனால் அதனை ஏற்றுக்கொள்கின்றனரோ தெரியவில்லை. பல ஆக்கங்களையும் நன்மைகளையும் கண்டிருக்கின்றது. இல்லை, அழிவுகளையும் தொட்டுப்பார்த்திருக்கின்றது.
ஏற்றத்தினை நாம் கண்டிருக்கின்றோம்; இறக்கத்தினையும் கண்டுகொண்டிருக்கின்றோம். உயர்வை நாம் பெற்றிருக்கின்றோம். தாழ்வையும் நாம் பெற்றிருக்கின்றோம். நிறைய மகிழ்ச்சியை பெற்றிருக்கின்றோம். துன்பத்தையும் நாம் அடைந்திருக்கின்றோம். நாம் மேன்மையையும் வானளாவப் பெற்றிருக்கின்றோம். ஆனால், இழிவான நிலையையும் பெற்றிருக்கின்றோம். இவை எல்லாவற்றுக்கும் நானும் காரணமாக இருந்திருக்கின்றேன். அர்ப்பணிப்புடனும் கூட்டுணர்வுடனும் பொறுமையுடனும் எப்பொழுதெல்லாம் நாம் சேவையாற்றினோமோ அப்பொழுதெல்லாம் நாம் ஆக்கத்தையும் புகழையும் வெற்றியையும் பெற்றுள்ளோம்.
எப்பொழுதெல்லாம் சந்தர்ப்பத்துக்கு ஒவ்வாத வகையில் பொய் கூறினோமோ, அதிக எதிர்ப்பார்ப்புகளுக்கு உட்பட்டோமோ, அதிக ஆசைக்கு அடிமைப்பட்டோமோ அப்பொழுதெல்லாம் அழிவையும் துன்பத்தையும் இழிவையும் பெற்றுக்கொண்டோம்.
ஆசிரியர்களாகிய எங்களுக்கு சமூகப் பார்வையும் நேர்த்தியான பார்வையும் இருத்தல் வேண்டும். எங்களுடைய பங்குபற்றலை நாங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். இது கல்வி சார்ந்த ஊழியர்களுக்கு மட்டுமல்ல, கல்வி சாரா ஊழியர்களுக்கும் பொருந்தும். இக் கல்லூரி உயிர்ப்புடன் இயங்குவதாலேயே நாம் உழைத்து ஊதியம் பெற்று வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதனை அனைவரும் உணரவேண்டும் என தெரிவித்தார்.
இவரின் பதிவுகள் சில ......
மூன்று முறிப்பு பனங்காமத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் ஆரம்ப கல்வியை யோகபுரம் மகாவித்தியாலயத்திலும் இடை நிலை கல்வியை ஓமந்தை மத்திய கல்லூரியிலும் உயர் கல்வியை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திலும் கற்றார். 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பட்டதாரியான இவர் 1982 இல் முல்லை புதுக்குடியிருப்பு மகாவித்தியாலயத்தில் விஞ்ஞான ஆசிரியரானார்.
1990 ஆம் ஆண்டு யாழ்ப்பணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமா பட்டத்தை பெற்ற இவர் 23.9.1993 அன்று வவுனியா தேசிய கல்வியில் கல்லூரியின் உதவி விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்.
1999 இல் தேசிய கல்வி நிறுவகத்தில் கல்வி முதுமாணி பட்டம் பெற்ற இவர் 2001 ஆம் ஆண்டு மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான கல்வியில் கல்வி முதுமாணி பட்டம் பெற்றார்.
2002 இல் வவனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் விரிவுரை இணைப்பாளராக பதவியுயர்வு பெற்ற இவர் 2004 ஆம் ஆண்டு கல்வியும் தர மேம்பாடும் உப பீடாதிபதியானார்.
2008 ஆம் ஆண்டு தேசிய கல்வி நிறுவகத்தில் பட்டபின் கல்வி முகாமைத்துவ டிப்ளோமா பட்டம் பெற்ற இவர் கொழும்பு மனித உரிமைகள் நிலையத்தில் மனித உரிமைகள் டிப்ளோமாவையும் பெற்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக