வெள்ளி, 16 மே, 2014

வட மாகாண சபையில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வை தடுத்து தீபத்தை எட்டி உதைத்த பொலிசார்!!!(படங்கள் இணைப்பு)

வடக்கு மாகாணசபையில் இன்று நடைபெறவிருந்த முள்ளிவாக்கல்நினைவேந்தல் நிகழ்வை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த உறவுகளை நினைவு கூறும் முகமாக மாகாணசபை உறுப்பினர்களால் இன்று காலை 11 மணியளவில் வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தில் அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 இந்த நிகழ்வை தடுக்கும் முகமாக மாகாணசபை அமைந்துள்ள பிரதேசம் எங்கும் பெருமளவான பொலிஸாரும் ,புலனாய்வுதுறையினரும்
குவிக்கப்பட்டிருந்தனர் அத்துடன் மாகாணசபை உறுப்பினர்களை சபைக் கட்டடத்துக்குள் உள்நுழைய விடாது பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.


இந்த நிலையில் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி ஆகிய இருவரும் இணைந்து மாகாணசபை கட்டிடத் தொகுதி எல்லைக்கு வெளியில் தீபத்தினை ஏற்றி அஞ்சலி செலுத்த முற்பட்டனர்.


இதன்போது சிவாஜிலிங்கத்தல் ஏற்றப்பட்ட தீபத்தை சாவகச்சேரி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி காலினால் தள்ளி வீழ்த்தி தீபத்தை அணைத்துவிட்டு இங்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தமுடியாது என தெரிவித்தார்.


அதனை தொடர்ந்து மாகாண சபை உறுப்பினர்கள் இருவரும் அஞ்சலி உரையாற்றிவிட்டு குறித்த இடத்தை விட்டு வெளியேறினர்.

சிவாஜி லிங்கத்தின் உரை..

முள்ளிவாய்க்காலில் இறந்த உறவுகளுக்காய் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வை தடுத்து நிறுத்திய பொலிசார் தீபத்தினையும் எட்டி உதைத்து இறந்த பின்னர் கூட எம் உறவுகளுக்கு மதிப்பளிக்க தவறி விட்டது இந்த கொடுங்கோல் அரசு.
இதனைக் கண்டித்து உரையாற்றிய வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்தார் தீபத்தினை எட்டி உதைத்ததன் மூலம் இந்த நாட்டில் கொடூரமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டுள்ளது. இரண்டாம் தரப் பிரஜைஜாக மதிக்கப்படுவதால் தான் எம் உரிமைகள் கூட மறுக்கப்படுகின்றது என்றார். அதுமட்டுமல்லாது இந்த நாட்டை சொந்தம் கொண்டாட முடியாத நிலைக்கும் நாம் தள்ளப்பட்டுள்ளோம் என்றார்.
எது எவ்வாறெனினும் மே 18 க்கு பிறகும் எம் உறவுகளுக்கான பணி தொடரும், 22ம திகதி கூட்டப்படும் சபையிலும் அஞ்சலி நிகழ்வு இடம்பெறும் என்றார்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக