
அச்சுவேலி - கதிரிப்பாய் முக்கொலை வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில மீண்டும் நாளை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. கடந்த 4 ஆம் திகதி அதிகாலை அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் மனைவியின் தாய், சகோதரன், சகோதரி ஆகிய மூவரை தனஞ்சயன் என்பவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்தார் என்று கூறப்படுகின்றது. இச்சம்பவத்தில் அவரின் மனைவி மற்றும் மைத்துனன் ஆகியோர் படுகாயமடைந்தனர். தப்பிச் சென்ற இந்நபர்
உரும்பிராய்ப் பகுதியில் வைத்து அன்றே கைது செய்யப்பட்டார். பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தானே இக்கொலைகளை செய்ததார் என அவர் ஒப்புக்கொண்டார் என்றும் கூறப்படுகின்றது. கைது செய்யப்பட்ட அவர் மறுநாள் 5 ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். இவரை 11 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் அவர் நாளை மீண்டும் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக