
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பை முன்னிட்டு மட்டக்களப்பு செங்கலடியில் வன பூங்கா ஒன்று அமைக்கப்படவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொடுவாமடு பிரதேசத்தில் குறிப்பிடப்பட்ட வன பூங்காவை அமைக்க திட்டமிட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மரம் நடுகை இடம்பெறவூள்ள வேளையில் இந்த வன பூங்காவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக