
கண்டி, பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நால்வருக்கும் நேற்றையதினம் பிணை வழங்கப்பட்டுள்ளது. உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக பல்கலைக்கழகத்திற்கு சமுகமளித்தபோது கூச்சலிட்டு அவமரிiயாதை செய்த சம்பவம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட நால்வருக்கும் தலா 25000 ரூபா ரொக்கப்பிணையிலும் பெற்றோர்கள்; செய்துகொண்ட ஒரு உடன்படிக்கையின்படியும் பிணையில்செல்ல கண்டி பிரதான மஜிஸ்திரேட் லலித் ஏக்கநாயக்க நேற்று உத்தரவிட்டுள்ளார். மேற்படி மாணர்களின் மேன்முறையீடு தொடர்பாக கடந்த திங்கட்கிழமை கண்டி மேல்நீதிமன்ற நீதிபதி பிரீத்தி மத்மன் சூரசேன இது தொடர்பாக அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக