திங்கள், 13 செப்டம்பர், 2010

மலையக மக்கள் முன்னணியுடன் இணையப் போவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை-அமைச்சர் இராதாகிருஷ்ணன்..!

மலையக மக்கள் முன்னணியுடன் இணையப் போவதாக தாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மலையக மக்கள் முன்னணியுடன் இணையப் போவதற்கான பேச்சுவார்த்தைகள் இன்னமும் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இன்னமும் உத்தியோகபூர்வமாக நான் இது குறித்து அறிவிக்கவில்லை. மேலும் எனது கோரிக்கைகள் ஏற்றுக் கொண்டால் மாத்திரமே நான் மலைய மக்கள் முண்ணனியுடன் இணைவது குறித்துத் தீர்மானிப்பேன். இதொகாவினர் என்னை சில விடயங்களில் புறக்கணித்து விட்டனர். இதன் காரணமாகவே நான் சுயேச்சையாகச் செயற்பட உத்தேசித்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக