புதன், 5 மே, 2010

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - ரவூப் ஹக்கீம்..!

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். அவசரகாலச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.திருகோணமலைப் பிரதேசத்தில் உப்பு ஆலை ஒன்றை அமைப்பதற்காக அரசாங்கம் பாரியளவு காணிகளை எடுத்துக் கொண்டுள்ளமையினால் நிலாவெளி மக்கள் தமது அன்றாட சீவனோபாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளது. அரசாங்கத்தின் மக்கள் சபைத் திட்டம் அரசியல் மயப்படுத்தப்படாது, சுயாதீனமாக இயங்கக் கூடிய ஓர் அமைப்பாக உருவாக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சமுர்த்தித் திட்டத்தைப் போன்று மக்கள் சபைத் திட்டமும் அரசியல் மயப்படுத்தப்படக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொழும்பு நடைபாதை வியாபாரிகள் அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். நடைபாதை வியாபாரிகள் பாதாள உலகக் கோஷ்டியினரின் நெருக்குதல்களினால் இன்னல்களை எதிர்நோக்கி வந்த சமயத்தில் அரசாங்கமும் அழுத்தங்களை பிரயோகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக