சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளது. 2010ம் ஆண்டு வரவுசெலவுத் திட்ட யோசனை சமர்ப்பிப்பு தொடர்பில் குறித்த குழு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் வாரமளவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். புதிய அரசாங்கத்திற்கு மேலதிகமாக கடன்களை வழங்க முடியுமா என்பது குறித்து பிரதிநிதிகள்குழு மதிப்பீடு செய்யவுள்ளது. வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் வரையில் இலங்கைக்கு மூன்றாம்கட்ட கடனுதவி அளிக்கப்படமாட்டாதென சர்வதேச நாணய நிதியத்தின் உயரதிகாரி கோஷ்லி மாட்டி தெரிவித்துள்ளார். 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச நாணய நிதியம் கட்டம்கட்டமாக வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக