செவ்வாய், 4 மே, 2010

அமைச்சுக்களுக்கு ஜனாதிபதி நிதியுதவி ஒதுக்கியமைக்கு ஜே.வி.பி. எதிர்ப்பு..!!

கடந்த வருடம் பாராளுமன்றில் அங்கீகாரம் பெறப்பட்டிருந்த பட்ஜெட்டானது ஏப்ரல் மாதத்துடன் முடிந்துவிட்ட நிலையில் 2010ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்திடம் அதிக அளவு அழுத்தத்தை கொடுக்கப் போவதாக ஜெனரல் சரத்பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணியிலுள்ள பெரிய கட்சியான ஜே.வி.பி. நேற்று தெரிவித்துள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படாத நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி அமைச்சுகளுக்கு நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் ஆனால் தாங்கள் வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்றில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கப் போவதாகவும் ஜனநாயக தேசிய கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன் நெத்தி தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருந்தால் மாத்திரமே ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்த முடியுமென நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது பாராளுமன்றம் கலைக்கப்படவில்லை இந்த வாரம் சபை கூடவுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் நாட்டின் நிதி விடயங்கள் பாராளுமன்றின் பொறுப்பில் உள்ளது என்றும் அவர் தெரவித்துள்ளார். ஆயினும் இந்த அதிகாரத்தை ஜனாதிபதி கையில் எடுத்து அமைச்சுகளுக்கு ஒதுக்கீடு செய்யவுள்ளார் நாங்கள் இதனை கண்டிக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக