ஓய்வுபெற்ற ஜெனரல் சரத்பொன்சேகாவை விடுதலை செய்யுமாறுகோரி திருமதி அனோமா பொன்சேகா தாக்கல்செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு எடுப்பதற்காக, பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுப்பதை இச்சந்தர்ப்பத்தில் மேற்கொள்ள வேண்டாமென மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது. பொன்சேகாவை கைதுசெய்து தடுத்துவைத்திருப்பது சட்டவிரோதம் என குறிப்பிட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைமீதான மனுவை விசாரித்து தீர்ப்பளித்த பின் அழைப்பாணை விடுப்பது குறித்து பரிசீலித்து பார்ப்பதாகவும் நீதிபதிகள் குழுவில் முடிவானது. இந்த ஆட்கொணர்வு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் எதிர்ப்புகள் இருப்பின் மே 21ம் திகதி முன்வைக்கலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக