நேபாளத்தில் நடைபெறவிருக்கும் சார்க் மாநாட்டின்போது, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளவிருப்பதாக புதிய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார். இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் தொடர்பில் இந்தியப் பிரதமருக்கு மஹிந்த ராஜபக்ஸ விளக்கமளிக்கவிருப்பதாகவும் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார். இலங்கையின் நட்பு நாடும், அயல் நாடும் இந்தியாவாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுவருவதாகவும் ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக