செவ்வாய், 27 ஏப்ரல், 2010

நடிகை சிந்து மேனன் ரகசிய திருமணம்..!

நடிகை சிந்து மேனன், பிரபு திருமணம் பெங்களூரில் நேற்றுமுன்தினம் நடந்தது. கேரளாவில் திருச்சூர் மாவட்டம் இரிஞ்ஞாளகுடாவை சேர்ந்தவர் சிந்து மேனன். பெங்களூரில் படிப்பை முடித்து, அங்கேயே செட்டில் ஆனார். பின் மலையாளத்தில் 'உத்தமன்' படத்தில் ஜெயராமுடன் நடித்தார். தொடர்ந்து 'வாஸ்தவம்', 'ராஜமாணிக்கம்', 'ட்வென்ட்டி ட்வென்ட்டி' உள்பட பல படங்களில் நடித்தார். தமிழில் பாரதிராஜா இயக்கிய 'கடல் பூக்கள்' மூலம் அறிமுகம் ஆனார். 'சமுத்திரம்' படத்திலும் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பின் கடந்த ஆண்டு 'ஈரம்' படத்தில் நடித்தார். தெலுங்கில் 'சந்தமாமா'வில் நடித்தார். இப்போது ஆங்கில படம் ஒன்றில் நடித்து வந்தார். இதற்கிடையே உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரபு என்பவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர், கம்ப்யூட்டர் இன்ஜினீயராக உள்ளார். இந்த காதலுக்கு இரு குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து இவர்கள் திருமணம் பெங்களூரில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி, பெங்களூர் எம்.ஜி. சாலையிலுள்ள பவுரிங் கிளப்பில் நேற்றிரவு நடந்தது. இதில் 'ஈரம்' பட இயக்குனர் அறிவழகன், நடிகர் நந்தா உள்பட திரையுலகினர் பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக