வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

வடக்கின் வீதி அபிவிருத்திக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உதவி..!

வடக்கின் வீதிகள் ஒருங்கிணைப்புத் திட்டத்தின் கீழ் 119.8 கிலோ மீட்டர் வீதிகளை புனரமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்தத் திட்டத்துக்கான அமைச்சரவைப் பத்திரத்தை நெடுஞ்சாலைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமர்பித்திருந்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா இதனைத் தெரிவித்தார்.
அதன்படி தம்புள்ளை கற்குளம் வீதியின் முதல்கட்டமாக 23.85 கிலோ மீட்டரும் இரண்டாம் கட்டமாக 23.85 கிலோ மீட்டரும் மானிப்பாய் கைதடி வீதியில் 13.70 கிலோமீட்டரும் நாவற்குளி காரைதீவு வீதியில் 16.50 கிலோ மீட்டரும் வெள்ளாய் தெல்லிப்பளை அராலி வீதியில் 27.40 கிலோ மீட்டரும் அநுராதபுரம் ரம்பாவ வீதியில் 14.50 கிலோ மீட்டருமாக 119.8 கிலோ மீட்டர் வீதிகள் புனரமைக்கப்படவுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக