ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

இலங்கையின் பிரபல நாடகக் கலைஞர் சிறீதர் பிச்சையப்பா கொழும்பில் காலமானார்

இலங்கையின் பிரபல நாடகக் கலைஞர் சிறீதர் பிச்சையப்பா சுகயீனம் காரணமாக இன்றுகாலை 8.00 மணியளவில் கொழும்பில் காலமானார். இறக்கும்போது இவருக்கு வயது 47. இவரது பூதவுடல் தற்போது அரசினர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நாளை 2.00மணியளவில் மாதம்பிட்டிய மயானத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1953ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் திகதி பிறந்தவர் சிறீதர் பிச்சையப்பா. சிறு வயது முதலே கலைத்துறையில் ஆர்வம் கொண்டவர். பிரபல நாடகக் கலைஞர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், எழுத்தாளர், மிமிக்ரி, மற்றும் ஓவியம் என ஒட்டு மொத்தக் கலைத்துறையில் ஈடுபட்டு, தன்னை முழுமையாகக் கலைத் தாய்க்கு அர்ப்பணித்தவர் சிறீதர் பிச்சையப்பா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக