பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல்கட்சிகள் தொடர்ந்தும் இரகசிய சந்திப்புகளிலும் விசேட கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டு வருகின்ற நிலையில் தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனுடன் தேர்தல் உடன்பாடு தொடர்பாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்)த்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கருத்துரைக்கையில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் மாத்திரமல்ல ஏனைய தமிழ்க் கட்சிகளுடனும் தேர்தல் உடன்பாடு தொடர்பாகச் சந்திப்புகளிலும் பேச்சுவார்த்தைகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றோம். தேர்தல் உடன்பாடு என்பதற்கு அப்பால் எதிர்காலத்தில் எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான பொதுவான ஐக்கியத்துடன் செயற்படும் ஜனநாயகச் செயற்பாடே அவசியமாகும். தேர்தலில் போட்டியிடுவதற்கான உடன்பாடு என்பது தற்காலிகமான ஒன்றாகும். ஆனால் எமதுமக்களின் அரசியல் உரிமைகளை முழுமையாக வென்றெடுப்பதற்கான ஒருமித்த கருத்துள்ள நிலைப்பாட்டை அனைத்து தமிழ்கட்சிகளும் ஒன்றுபட்டு முன்னெடுக்க வேண்டும். இதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய தமிழ்க்கட்சிகளுடனும் தொடர்ந்தும் பேச்சுகளில் ஈடுபட்டு வருகின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக