தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை நீக்கிவிட்டு புதியவர்களை இணைக்கும் முயற்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்த கிஷோர், தான் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழ் வன்னியில் போட்டியிடவுள்ளதாக அடித்துக்கூறியுள்ளார்.
தன்னைப்போலவே, கூட்டமைப்பின் இன்னொரு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சதாசிவம் கனகரட்ணமும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் கீழ் போட்டியிடவுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரியும் ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டணியின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் என்று சில செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி இன்னமும் உத்தியோகபூர்வ தகவல் எதனையும் தெரிவிக்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக