
எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேக்கா இன்றையயதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சில தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முற்பகல் 10.00 மணிக்கு யாழ் நகரத்திற்கு அருகிலும், பிற்பகல் 3.00 மணிக்கு நல்லூர் கோயிலுக்கு அருகிலும் நடைபெறும் கூட்டங்களில் அவர் கலந்துகொள்ளவுள்ளதாகவம், அத்துடன் நாளை முற்பகல் 10.00 மணிக்கு வவுனியா, மன்னார் ஆகிய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்ளும் சரத் பொன்சேக்கா பிற்பகல் 3.00மணிக்கு வவுனியாவில் நடைபெறும் பொதுக் கூட்டமொன்றிலும் உரையாற்றவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக