புதுவருடத்தினை முன்னிட்டு கொழும்பு நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரத்ன தெரிவித்துள்ளார். இந்தப் பாதுகாப்பு நடவடிக்கை இன்னும் இரண்டு தினங்களுக்கு அமுலில் இருக்குமெனவும் பொலீஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். இதற்காக 350முதல் 400வரையிலான பொலீசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, 20மோட்டார் சைக்கிள் பிரிவுப் பொலீசார் மற்றும் 12 அவசர அழைப்புப் பிரிவினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக