
எதிர்வரும் ஜனவரிமாதம் 26ம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்க வேண்டியமை தமிழர்கள் அனைவரதும் தலையாய கடமையாகும் என்று மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வரான சிவகீதா பிரபாகரன் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் விடயத்தில் தமிழ் பேசும் மக்கள் தடுமாறவேண்டிய அவசியமில்லை. நிச்சயமாக வெற்றிபெற இருப்பவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவேதான். எமக்கு உண்மையான நிம்மதியையும், சுதந்திரத்தையும் பெற்றுத் தந்தவரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவேதான். முப்பது வருடங்களின் பின்னர் எமது மக்கள் அபிவிருத்தியின் வாசனையை இவரின் ஆட்சியில்தான் நுகரத் தொடங்கியுள்ளனர். எனவே அவருக்கு வாக்களிக்கின்றமையானது தமிழர்கள் அனைவரதும் தலையாய கடமையாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக