வியாழன், 17 டிசம்பர், 2009

இலங்கை மீதான ஐக்கிய நாடுகளின் விசாரணைகளுக்கு உதவ தயார் -அமெரிக்கா தெரிவிப்பு!

ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளும் இலங்கையின் மனிதஉரிமை மீறல்களுக்கான விசாரணைகளுக்கு தாம் ஒத்துழைக்க தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது அதேவேளை இலங்கை அரசாங்கமும் மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்த வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது அத்துடன் தமிழர் பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் நாளாந்த செய்தியாளர் சந்திப்பின் போது அமெரிக்காவின் பொதுமக்கள் விவகாரங்களுக்கான பிரிவின் உதவிச்செயலாளர் பிலிப் ஜே க்ரௌலி இந்த கருத்துக்களை வெளியி;ட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் பத்திரிகை மீதான தடைகள் உட்பட மனிதஉரிமை மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் அத்துடன் முன்னர் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதா பிலிப்க்ரௌலி குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக