ஆசியாவின் செல்வந்த குடும்பமாக உருவாகும் நோக்கில் தாம் அரசியலில் ஈடுபடவில்லை என எதிர்கட்சிகளின் பொதுவான வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார் ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டு;ள்ளார். வத்தளை வெலிசர நவலோக மைதானத்தில் இந்த மாநாடு இடம்பெற்றது. யுத்தவெற்றியை ஈட்டிக்கொடுத்த ஏனைய படைத்தளபதிகள் முதல் கடைநிலை சிப்பாய் வரையிலான அனைவருக்கும் சலுகைகளை வழங்க வேண்டும் என்பதே எமது எண்ணம் என அவர் குறிப்பிட்டள்ளார் எனினும் இராணுவத்தளபதிகளோ அல்லது கூட்டுப்படைத்தளபதியாகவோ அந்த சேவைகளை வழங்க முடியாதென அவர் தெரிவித்துள்ளார். யுத்தவெற்றி இந்த மாநாட்டின் சகல இன மக்களுக்கும் உரிமையானதென அவர் சுட்டிக் காட்டியுள்ளார். கடந்த காலங்களில் ஆட்சி வகித்த சகல ஆட்சியாளர்களும் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அர்ப்பணிப்புடன் போராடிய போதிலும் இராணுவத்தினர் சிலநேரங்களில் பின்வாங்க நேரிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் அனைத்து தலைவர்களும் நாட்டை மீட்டெடுப்பதற்கான யதார்த்தபூர்வமான முனைப்புடன் செயற்பட்டதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார் இதற்கு முன்னர் பயங்கரவாதிகளை படையினர் நெருங்கவில்லை எனவும் அதனால் சர்வதேச ரீதியில் எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். யுத்தவெற்றியின் பின்னர் ஓர் தனி;ப்பட்ட அரசியல் கட்சி யுத்தவெற்றியை தனது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கட்டம் கட்டமாக யுத்தத்தை காட்டியே தேர்தல்களிலும் ஆளும்கட்சி வெற்றியீட்டியதாக அவர் தெரிவித்துள்ளார் நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தை ஏற்படுத்தும் வகையில் ஆட்சி நடத்துவதே தமது பிரதான இலக்கு என சரத்பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.
திங்கள், 7 டிசம்பர், 2009
ஆசியாவின் செல்வந்த குடும்பமாகும் நோக்கில் நான் அரசியலில் ஈடுபடவில்லை -சரத் பொன்சேகா தெரிவிப்பு !
ஆசியாவின் செல்வந்த குடும்பமாக உருவாகும் நோக்கில் தாம் அரசியலில் ஈடுபடவில்லை என எதிர்கட்சிகளின் பொதுவான வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார் ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டு;ள்ளார். வத்தளை வெலிசர நவலோக மைதானத்தில் இந்த மாநாடு இடம்பெற்றது. யுத்தவெற்றியை ஈட்டிக்கொடுத்த ஏனைய படைத்தளபதிகள் முதல் கடைநிலை சிப்பாய் வரையிலான அனைவருக்கும் சலுகைகளை வழங்க வேண்டும் என்பதே எமது எண்ணம் என அவர் குறிப்பிட்டள்ளார் எனினும் இராணுவத்தளபதிகளோ அல்லது கூட்டுப்படைத்தளபதியாகவோ அந்த சேவைகளை வழங்க முடியாதென அவர் தெரிவித்துள்ளார். யுத்தவெற்றி இந்த மாநாட்டின் சகல இன மக்களுக்கும் உரிமையானதென அவர் சுட்டிக் காட்டியுள்ளார். கடந்த காலங்களில் ஆட்சி வகித்த சகல ஆட்சியாளர்களும் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அர்ப்பணிப்புடன் போராடிய போதிலும் இராணுவத்தினர் சிலநேரங்களில் பின்வாங்க நேரிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் அனைத்து தலைவர்களும் நாட்டை மீட்டெடுப்பதற்கான யதார்த்தபூர்வமான முனைப்புடன் செயற்பட்டதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார் இதற்கு முன்னர் பயங்கரவாதிகளை படையினர் நெருங்கவில்லை எனவும் அதனால் சர்வதேச ரீதியில் எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். யுத்தவெற்றியின் பின்னர் ஓர் தனி;ப்பட்ட அரசியல் கட்சி யுத்தவெற்றியை தனது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கட்டம் கட்டமாக யுத்தத்தை காட்டியே தேர்தல்களிலும் ஆளும்கட்சி வெற்றியீட்டியதாக அவர் தெரிவித்துள்ளார் நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தை ஏற்படுத்தும் வகையில் ஆட்சி நடத்துவதே தமது பிரதான இலக்கு என சரத்பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக