

ஓஷியானிக் வைக்கிங் கப்பலில் வந்த இலங்கைத்தமிழர்கள் 78பேரும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியதைத்தொடர்ந்து அவர்களுக்கு புகலிடம் வழங்கவேண்டிய நிலையில் அவுஸ்திரேலியா உள்ளது ஏனெனில் மேற்படி 78பேரும் அகதிகள் என ஐ.நா. நிரூபித்தால் அவர்களுக்கு புகலிடம் வழங்க முன்வருவதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். இப்போது அவருக்கு கைகொடுக்கும் விதமாக நோர்வேயும் நியுசிலாந்தும் உதவ முன்வந்துள்ளனர். அவுஸ்திரேலியாவும் யுஎன்எச்சிஆர் தம்முடன் தொடர்புகொண்டதையடுத்து 78பேரில் மூவரை அவர்களின் குடும்பங்களுடன் நோர்வே நாட்டில் புகலிடம் வழங்குவது குறித்து தாம் ஒஸ்லோவில் கலந்தாலோசித்து வருவதாக நோர்வேயின் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர் இதேபோல் தாமும் சில அகதிகளை தமது நாட்டில் குடியமர்த்துவதாக நியுசிலாந்து தெரிவித்துள்ளது மேலும் கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் தமக்கு உதவி செய்யம் பொருட்டு சில அகதிகளை குடியமர்த்துவார்கள் என அவுஸ்திரேலியா நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த அகதிகள் கப்பல் தொடர்பாக அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் கையாண்ட விதம் குறித்து அவர்மீது பல கண்டணங்கள் வந்திருந்தமையும் குறிப்பிடதக்கது. ஆனால் இப்போது இவ்விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உயர்மட்டத்தில் கையாளப்பட்டு வருவதாக நியுசிலாந்தின் குடிவரவு அமைச்சர் ஜொனாதன் கோல்மானின் பேச்சாளர் நேற்று உறுதிப்படுத்தியுள்ளார். நியுசிலாந்துக்கு அகதிகளை எடுப்பது குறித்து கெவின் ரூட் மற்றும் நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ மற்றும் முக்கிய அமைச்சர்களும் கலந்தாலோசித்து வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக