செவ்வாய், 15 டிசம்பர், 2009

ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 17வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தினர் !

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பொருட்டு இதுவரை 17வேட்பாளர்கள் கட்டுப்பணங்களை செலுத்தியுள்ளனர். இன்று நண்பகல்வரை 14வேட்பாளர்கள் கட்டுப்பணங்களை செலுத்தியிருந்தனர். இதனிடையே இன்றுபிற்பகல் தமிழ்க்கூட்டமைப்பு எம்.பி என்.கே.சிவாஜிலிங்கம், என்.எம்.முஸ்தபா மற்றும் இந்துன் விஜேகோன் ஆகியோர் சுயேட்சை வேட்பாளர்களாக தமது கட்டுப்பணங்களைச் செலுத்தியுள்ளனர். இதனடிப்படையில் அதிகப்படியான வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலாக இந்தமுறை தேர்தல் அமையவுள்ளது. இதற்கு முன்னர் 2005ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 14பேர் வேட்பாளர்களாக போட்டியிட்டிருநமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவடைகின்றன. கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் நாளை நண்பகல் 12மணியுடன் நிறைவடையவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் டபிள்யூ.பி.சுமணசிறி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக