சனி, 17 ஜனவரி, 2015

விக்னேஸ்வரன் ஜனாதிபதியை சந்திக்க உள்ளார்..!!

வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க உள்ளார்.
காணிப் பிரச்சினை, மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல்வெறு விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட உள்ளது.

எதிர்வரும் நாட்களில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வட மாகாணப் பிரச்சினைகள் குறித்து ஏற்கனவே ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


இந்த பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் விரைவில் பேச உத்தேசித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 12ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி மைத்திரிபால சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார்.

எனினும், இந்த சந்திப்பில் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக