புதன், 3 டிசம்பர், 2014

கொழும்பில் ஜப்பானின் இரண்டு கடற்படைக் கப்பல்கள்..!!!

இலங்கையின் அழைப்புக்கிணங்க இரண்டு ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு சென்றுள்ளன.

ஹருசேம் டிடி 102 மற்றும் அமாகிரி டிடி 154 என்ற கப்பல்களே கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ளன.

இந்த இரண்டு கப்பல்களும் நேற்று கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்தன.

காலியில் நடைபெற்ற சர்வதேச கடல்பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு இந்தக்கப்பல்கள் கொழும்புக்கு சென்றுள்ளன.

இந்த இரண்டு கப்பல்களும் நாசகாரி கப்பல்களாகும். இவையிரண்டும் முறையே 151 மீற்றர் மற்றும் 137 மீற்றர் நீளத்தை கொண்டவையாகும்.


இதில், ஹருசேம் 4550 தொன் நிறையை கொண்டது. ஆமாகிரி 3550 தொன் நிறையை கொண்டது.

இந்த இரண்டு கப்பல்களிலும் 390 கடற்படையினர் பயணம் செய்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக