சனி, 8 நவம்பர், 2014

தாய் - தந்தைக்கு அருங்காட்சிகம் நிர்மாணித்த மகிந்த..!!

சிரேஷ்ட அரசியல்வாதியும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தந்தையாருமான அமரர் டி.ஏ. ராஜபக்ச மற்றும் அவரது மனைவி அமரர் தந்தினா சமரசிங்க திஸாநாயக்க ஆகியோரை நினைவுகூரும் வகையில் அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது.

மெதமுலன கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை ஜனாதிபதி நேற்று திறந்து வைத்தார்.

டி.ஏ. ராஜபக்ஷவின் 47வது நினைவு தினத்தை முன்னிட்டு இந்த அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது.

அருங்காட்சியகத்தில் டி.ஏ. ராஜபக்ச தம்பதியினர் பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் மெழுகு சிலைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.


இந்த நிகழ்வில் சபாநாயகர் ஷமல் ராஜபக்ச, அமைச்சர் பசில் ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, ஆகியோருடன் ராஜபக்ச குடும்பத்தினர் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக