சனி, 8 நவம்பர், 2014

தேர்தலுக்கு முன் அடையாள அட்டை வழங்குவதற்கான ஏற்பாடு..!!!

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான நடமாடும் சேவையொன்றை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ளதாக கபே அமைப்பு அறிவித்துள்ளது.
அவ்வமைப்பு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையொன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பதுளை, திருகோணமலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களை மையப்படுத்தியதாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதனையடுத்து, ஏனைய மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைக்கு வரும்.

இந்த பாரிய செயற்திட்டத்தை ஆட்பதிவுத் திணைக்களம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் அமைப்பு என்பனவற்றுடன் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாகவும் அவ்வமைப்பு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக