திங்கள், 15 செப்டம்பர், 2014

14 மெய்ப் பாதுகாவலர்களுடன் ஊவாவில் ஹிருணிக்கா!!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவுக்கு 6 மெய்பாதுகாவலர்கள் இருப்பதுடன் 8 அமைச்சரவை பாதுகாப்பு பிரிவினரின் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றிருந்த ஹிருணிக்கா தனது பாதுகாவலர்கள்
எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

மொத்தமாக 14 பேரின் பாதுகாப்பு ஹிருணிக்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கறுப்பு சட்டை மற்றும் காற்சட்டை அணிந்திருக்கும் ஆறு பேர் மெய்ப்பாதுகாலர்கள். கறுப்பு காற்சட்டை மாத்திரம் அணிந்திருப்பவர்கள் அமைச்சரவை பாதுகாப்பு பிரிவினர்.

ஹிருணிக்காவின் தந்தையான முன்னாள் அமைச்சர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்ட பின்னர், அமைச்சரவை பாதுகாப்பு பிரிவினர் கறுப்பு நிற காற்சட்டை அணியும் முறை அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக