வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

வடமாகாண பிரதம செயலாளரின் வாகனம் மோதியதில் ஒருவர் காலை இழந்தார்!(படங்கள் இணைப்பு)

வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ் அவர்களின் வாகனம் கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளை மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்றைய தினம் கிளிநொச்சி காக்கா கடைச் சந்தியில் வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் பயணித்த வாகனம்,முன்னால்
சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியது.

இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிவசாமி சுதாகரன் என்பவர் காலை இழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் சந்தியொன்றில் திரும்ப முற்பட்ட வேளை, பின்னால் வந்த பிரதம செயலாளருடைய வாகனம் மோதியதனாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் படுகாயமடைந்த சுதாகரன் என்பவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பிரதம செயலாளருடைய வாகனத்தைப் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக