ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

பொது அபேட்சகராக தயார்! ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் தம்பர அமில தேரர்....!!!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய பிக்குமார் முன்னணியின் பொதுச் செயலாளர் தம்பர அமில தேரர் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறுபான்மை மக்களின் நலன் பேணும் அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ள தம்பர அமில தேரர் சிங்கள மக்கள் மத்தியில் பரவலான ஆதரவுத் தளத்தையும் கொண்டுள்ளார்.

அத்துடன் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், தேசிய பிக்குமார் முன்னணி போன்றவற்றிலும் மிக முக்கிய பொறுப்புகளைக் கொண்டுள்ளார்.

இதுவரை காலமும் அவரது செயற்பாடுகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பானதாகவே இருந்து வந்தது.


எனினும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது தான் போட்டியிடப் போவதாக அவர் தற்போது அறிவித்துள்ளார்.

இது ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகளைப் பிரிக்கும் ஒரு நடவடிக்கையாகவே அரசியல் அவதானிகளால் நோக்கப்படுகின்றது.

எனினும் இது தொடர்பான இறுதி முடிவை தாம் இன்னும் எடுக்கவில்லை என்று தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளதால், இறுதி நேரத்தில் இந்த முடிவில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக