வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

வவுனியாவில் மோட்டார் சைக்கில் விபத்து; ஒருவர் மரணம்!!ஒருவர் காயம்!!


வவுனியா மல்லாவி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மல்லாவி துனுக்காய் வீதியில் கொத்தம்பியார்குளம் பகுதியில் நேற்று மாலை மோட்டார் சைக்கிலொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்
தெரிவிக்கினறது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர் மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்வரின் சடலம் மல்லாவி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் மல்லாவி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக