வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

கொக்கட்டிச்சோலை சம்பவம்; தொடர்புடைய 13 பேர் கைதாம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை காஞ்சிரங்குடா பனைஅறுப்பான் கிராமத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதல் தொடர்பில் இதுவரை மூன்று பெண்கள் உட்பட 13 பேரை தாம் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர் என்று கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். பனை அறுப்பான் கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பிலேயே இந்த 13பேரும் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை ஏழு பேரும் வியாழக்கிழமை ஆறுபேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர்களில் புதன்கிழமை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் முற்படுத்தப்பட்டு எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஏனைய சந்தேக நபர்களையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது என்று கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக